அச்சரப்பாக்கம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி

அச்சரப்பாக்கம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
அச்சரப்பாக்கம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி
Published on

வாகனம் மோதியது

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் முருகன் (34). நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் முருகன் சென்னை- திண்டிவனம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் முருகனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சாவு

இதில் சம்பவ இடத்திலேயே முருகன் பலியானார். அச்சரப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தர்மலிங்கம் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com