காட்டுமன்னார்கோவில் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

காட்டுமன்னார்கோவில் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காட்டுமன்னார்கோவில் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் வடக்கு கொளக்குடி வார சந்தை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் காட்டுமன்னார்கோவில் அருகே கருப்பேரி கிராமத்தில் உள்ள வாய்க்கால் தெருவை சேர்ந்த ஜான்சன் மைக்கேல் ராஜ்(வயது 21) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து ஜான்சன் மைக்கேல் ராஜை கைது செய்த போலீசார், அவாடமிருந்த 100 கிராம் கஞ்சா, ரூ.20 ஆயிரம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com