சென்னை எழும்பூரில் ரெயில் என்ஜின் தடம் புரண்டது...!

தண்டவாளத்தில் இருந்து 3 சக்கரங்கள் கீழே இறங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் ரெயில் என்ஜின் தடம் புரண்டது...!
Published on

சென்னை, 

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேத்துப்பட்டு ரெயில் பணிமனையில் இருந்து பெட்டிகளை இழுத்து சென்ற ரெயில் என்ஜின் எழும்பூர் ரெயில் நிலைய 1 மற்றும் 2 நடைமேடை நோக்கி வந்து கொண்டு இருந்தது.

அப்போது திடீரென ரெயில் என்ஜின் தடம்புரண்டது. தண்டவாளத்தில் இருந்து 3 சக்கரங்கள் கீழே இறங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஊழியர்கள் ரெயில் என்ஜினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com