கவர்னர் மாளிகை எதிரில் மரம் முறிந்து விழுந்து பெண் காவலர் காயம்

கவர்னர் மாளிகை எதிரில் மரம் முறிந்து விழுந்ததில் பெண் காவலர் காயமடைந்தார்.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை மெயின் கேட்டுக்கு எதிரில் இருந்த மரம் திடீரென முறிந்து விழுந்தது. இதில் அந்த பகுதியில் இருந்த ஆயுதப்படை பெண் காவலர் நந்தினி என்பவர் படுகாயமடைந்தார். இதையடுத்து காவலர் நந்தினி மீட்கப்பட்டு சைதாப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரம் முறிந்து சாலையில் விழுந்துள்ளதால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மரத்தை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





