காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தண்டராம்பட்டு அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் 10 மாதத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் 10 மாதத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

காதல் திருமணம்

தண்டராம்பட்டு தாலுகா பெருங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, விவசாயி. இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 38) இவர்களுக்கு கோதாவரி (20) என்ற மகளும், அர்ஜுன் (18) என்ற மகனும் உள்ளனர். வள்ளியம்மாள் மலேசியாவில் வீட்டு வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த உறவினரான கார்த்திக் (24) என்பவரை கோதாவரி காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி அங்குள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று இரவு கோதாவரி வீட்டில் உள்ள ஒரு அறையில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். வெளியில் கார்த்திக் மற்றும் அவரது தாயாரும் தூங்கினர்.

இன்று அதிகாலை எழுந்து பார்த்தபோது கோதாவரி வீட்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவன் மற்றும் மாமியார் இது குறித்து தானிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 10 மாதத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com