பாலக்கோடு அருகேசரக்கு வாகனங்கள் மோதல்; டிரைவர் பலிபெண் படுகாயம்

பாலக்கோடு அருகேசரக்கு வாகனங்கள் மோதல்; டிரைவர் பலிபெண் படுகாயம்
Published on

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே சரக்கு வாகனங்கள் மோதியதில் டிரைவர் பலியானார். பெண் படுகாயம் அடைந்தார்.

சரக்கு வாகனம் மோதல்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே குளிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 39). சரக்கு வாகன டிரைவர். இவர் நேற்று முன்தினம் சரக்கு வாகனத்தில் காய்கறி பாரம் ஏற்றுவதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அவருடன் மகேந்திரமங்கலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கீதா (30) என்பவரும் வந்தார். அப்போது பாலக்கோடு அருகே கோடியூர் நெடுஞ்சாலை அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு சரக்கு வாகனம் முருகன் ஓட்டி வந்த சரக்கு வாகனம் மீது மோதியது.

விசாரணை

இந்த விபத்தில் முருகன், சங்கீதா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து முருகன் நேற்று மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறித்து சென்ற மகேந்திரமங்கலம் போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com