பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுப்பு - தொழிலாளர் நலத்துறை விளக்கம்

தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுப்பு - தொழிலாளர் நலத்துறை விளக்கம்
Published on

சென்னை,

தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், பட்டாசு ஆலைகள் அதிக அளவில் தொழிலாளர்களை பணியில் அமர்த்தி செயல்படும் பிரிவு என்பதாலும், பெரும்பாலான செயல்முறைகள் முழுமையாக தொழிலாளர்களை சார்ந்துள்ளதாலும் அதிக விபத்துக்கள் நிகழ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெரும்பாலான தொழிலாளர்கள் ரசாயணங்களை பாதுகாப்பாக கையாளும் முறை குறித்து முழுமையாக அறியாதவர்களாக இருப்பதே விபத்துக்கள் நிகழ முக்கிய காரணமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com