நெல்லை-தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தாதரில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

நெல்லையில் இருந்து தாதர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண். 22630) வருகிற ஏப்ரல் 15-ந்தேதி முதலும், தாதரில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22629), வருகிற ஏப்ரல் 16-ந்தேதி முதலும் 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்று, 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி 4 கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளது.

Also Read
அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோப்புப்படம்

தாதரில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஏப்ரல் 15-ந்தேதி முதல் தாதருக்கு பதிலாக மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இதேபோல, நெல்லையில் இருந்து தாதர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் மேற்கண்ட ரெயில் நிலையத்திற்கு வந்து சேரும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பாதுகாப்பானதாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்
கோப்புப்படம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com