கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை

விருதுநகர் நகராட்சி பகுதிக்கான கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை
Published on

விருதுநகர் நகராட்சி பகுதிக்கான கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

குடிநீர் திட்டம்

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளுக்காக சீவலப்பேரிகளில் இருந்து தாமிரபரணி தண்ணீர் கொண்டு வரும் திட்டப்பணி ரூ.447 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இதில் அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் விருதுநகர் நகராட்சி பகுதிகளுக்கு தனித்தனியே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விருதுநகர் நகராட்சி பகுதிக்கான கூடுதல் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் ஒப்பந்ததாரரின் பணியாட்கள் பற்றாக்குறையால் தாமதமாகியுள்ளது.

விருதுநகர் நகராட்சிக்கான குடிநீர் உந்துநிலையம் மற்றும் இதர கட்டுமானபணி முடிவடைந்துள்ளது. ஆனாலும் பகிர்மான குழாய் பதிக்கும்பணி தாமதம் அடைந்துள்ளது.

விரைவில் பயன்பாட்டிற்கு வரும்

எனவே இப்பணிகளை விரைவுப்படுத்த அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகளிடமும் முறையிடப்பட்டுள்ளது. எனவே விருதுநகர் நகராட்சி பகுதிக்கான தாமிரபரணி கூடுதல் கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com