முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத பவுர்ணமி பூஜை

புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத பவுர்ணமி பூஜை நடந்தது.
முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத பவுர்ணமி பூஜை
Published on

வாசுதேவநல்லூர்:

புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மனுக்கு ஆடி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பு அருள் வாக்கு கூறப்பட்டது. இரவு 7 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா ஆடி மாத பவுர்ணமி பூஜை குறித்து ஆன்மிக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம் உட்பட 18 நறுமண பொருட்களால் அபிஷேகமும், உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1,008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகமும் நடந்தது.

தொடர்ந்து பரிவார தெய்வங்களான பாலவிநாயகர், கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, பதினெட்டாம்படி கருப்பசாமி, பவானி பத்திரகாளியம்மன், மகா காளியம்மன், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் முப்பெரும் தேவியர் அம்மனுக்கு சந்தன காப்பு, அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 9 மணியளவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com