5 நாட்களுக்குப் பின் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் சேவை

கனமழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டது.
நீலகிரி,
ஊட்டி, குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதன் காரணமாக, கல்லாறு - குன்னூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ஊட்டி - மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டு இருந்தது.
மலை ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சீரமைப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே நாளை முதல் வழக்கம் போல ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இதனை சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





