அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, ஈபிஎஸ் மான நஷ்ட ஈடு வழக்கு

தன்னை பற்றி அவதூறாக பேசிய அமைச்சர் உதயநிதிக்கு எதிராக ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, ஈபிஎஸ் மான நஷ்ட ஈடு வழக்கு
Published on

சென்னை,

கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக தான் பழனிசாமி சனாதனத்தை ஆதரிப்பதாக சமீபத்தில் அமைச்சர் உதயநிதி பேசியதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில்,

'தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தன்னை பற்றி அவதூறாக பேசியுள்ளார். தன்னை பற்றி உதயநிதி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும். ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com