

வாய்மேடு ஆலடி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா கடந்த 23-ந்ததி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சாமிக்கு அபிஷேக, ஆராதனைகளும், சாமி பல்வேறு வாகனத்தில் வீதி உலாவும் நடந்து வருகிறது. தேவன்காடு மண்டகப்படியையொட்டி ஆலடிமாரியம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.