முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தியாகதுருகம் அரசுப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Published on

தியாகதுருகம்

தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு முன்னாள் மாணவர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். சீனிவாசன், ரஜினிகாந்த், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரி மன்னன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சண்முகம், சீத்தாராமன், ஷெரிப் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பழைய நினைவுகளை நெகழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்ட அவர்கள் ஒன்றாக அமர்ந்து விருந்து உண்டனர். மேலும் அரசு பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் 10 கண்காணிப்பு கேமராக்களை பள்ளி வளாகத்தில் அமைக்க முடிவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிரிஸ்டோபர் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com