செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதலாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதலாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதலாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

செங்கல்பட்டு,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முனைப்புடன் பணியாற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதலாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 764 ஆக உயர்வடைந்து உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 245 பேர் குணமடைந்துள்ளனர். 513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com