சாலை ஓரம் நடந்து சென்றபோது வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

சாலை ஓரம் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
சாலை ஓரம் நடந்து சென்றபோது வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
Published on

தனியார் நிறுவன ஊழியர்

உத்தரப்பிரதேச மாநிலம், அம்பேத்கர் நகர், கேசவ்புரம், மகிலா டவுன் மகிலா தெருவை சேர்ந்தவர் பல்ராம் (வயது 62). இவர் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் கிராமத்தில் தங்கி அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் பல்ராம் போளிவாக்கத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சாலையில் நடந்த சென்று கொண்டிருந்தார்.

வாகனம் மோதியது

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலி

அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பல்ராம் பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com