ஓட்டல் அறையில் தங்கிய தனியார் நிறுவன ஊழியர் திடீர் சாவு

நெல்லையில் ஓட்டல் அறையில் தங்கிய தனியார் நிறுவன ஊழியர் திடீரென இறந்தார்.
ஓட்டல் அறையில் தங்கிய தனியார் நிறுவன ஊழியர் திடீர் சாவு
Published on

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் சாங்கோதரர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 52). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் வேலை விஷயமாக அடிக்கடி நெல்லைக்கு வந்து செல்வார். கடந்த 2-ந்தேதி நெல்லை வந்த சுரேஷ் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். நேற்று காலையில் அவர் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பாட்ஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பாத்தனர். அப்போது அங்கு சுரேஷ் இறந்து கிடந்தார். தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சுரேஷ் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவர் உயிர் இழந்துள்ளார் என்று தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com