மீன்வளத்துறை பணியிடங்களுக்கு ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

வீரபாண்டியபட்டணம் மீனவ கிராம சுற்று வட்டாரப்பகுதியில் வசித்து வரும் தகுதியான நபர்கள் ஜூன் 30க்குள் மீன்வளத்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மீன்வளத்துறை பணியிடங்களுக்கு ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
Published on

தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்நோக்கு சேவை ஊழியர்களாக தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டணம் மீனவ கிராமத்தில் ஒப்பந்த அடிப்படையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் சாகர் மித்ரா பணியாளராக பணிபுரிந்திட 1.7.2024 அன்றைய தேதியில் 35 வயது நிறைவடையாத மீன்வள அறிவியல் (Fisheries Science) / கடல் உயிரியல் (Marine Biology) / விலங்கியல் (Zoology) பட்டப்படிப்பு / பன்னிரெண்டாம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்று வீரபாண்டியபட்டணம் மீனவ கிராம சுற்று வட்டாரப்பகுதியில் வசித்து வரும் தகுதியான நபர்கள் 30.6.2025க்குள் விண்ணப்பித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வடக்கு கடற்கரை சாலை, மீன்வளத்துறை வளாகம், தூத்துக்குடி என்ற முகவரியில் வார வேலை நாட்களில் நேரில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com