குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு ஜனவரி 5 வரை விண்ணப்பிக்கலாம்: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்

பாதுகாப்பு அலுவலர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் கணிணி அறிவு உடையவராகவும் இருப்பதோடு, 1.10.2025 அன்று 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த) பணியிடம் ஒன்று முற்றிலும் தற்காலிக ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 5.1.2026 வரை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த)
மாத தொகுப்பூதியம் : ரூ.27,804/-
பணியிட எண்ணிக்கை : 1
பணிபுரியும் இடம்: கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
கல்வித் தகுதி: சமூகப்பணி/ சமூகவியல்/ குழந்தைகள் வளர்ச்சி/ மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல்/ மனநலம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமுதாய வள மேலாண்மை இவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தின் மூலம் வழங்கப்பட்ட முதுகலைப்பட்டம் அல்லது சமூகப்பணி/ சமூகவியல்/ குழந்தைகள் வளர்ச்சி/ மனித உரிமைகள்/ பொது நிர்வாகம் இளநிலை பட்டம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு உளவியல்/ மனநலம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமுதாய வள மேலாண்மை ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தின் மூலம் வழங்கப்பட்ட இளங்கலைப்பட்டம் மற்றும் திட்டம் உருவாக்குதல் மற்றும் செயலாக்கம், அனுபவம், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையில் 2 ஆண்டுகள் அனுபவம் சமூக நலன் மற்றும் பெண்கள் மற்றும் வளர்ச்சி துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் கணிணி அறிவு உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
1.10.2025 அன்று 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
மாதிரி விண்ணப்ப படிவம் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாக வலைதளத்தில் (www.kanniyakumari.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலம். மேற்சொன்ன பதவிக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து புகைப்படத்துடன் (Pass Port Size) கூடிய விண்ணப்பம் 5.1.2026 அன்று மாலை 5.30க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 3-வது தளம், இணைப்பு கட்டிடம், மாவட்ட கலெக்டர் அலுவலம், நாகர்கோவில்-629001 என்ற முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. முழுமையாக பூர்த்தி செய்யபடாத விண்ணப்பம் மற்றும் குறிப்பிட்ட காலகெடுக்குள் வந்து சேராத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






