கப்பலில் காணாமல் போன நெல்லையை சேர்ந்த வாலிபரை மீட்க உரிய நடவடிக்கை: ஆந்திர முதல்-மந்திரிக்கு, வைகோ கடிதம்

கப்பலில் காணாமல் போன நெல்லையை சேர்ந்த வாலிபரை மீட்க உரிய நடவடிக்கை: ஆந்திர முதல்-மந்திரிக்கு, வைகோ கடிதம்.
கப்பலில் காணாமல் போன நெல்லையை சேர்ந்த வாலிபரை மீட்க உரிய நடவடிக்கை: ஆந்திர முதல்-மந்திரிக்கு, வைகோ கடிதம்
Published on

சென்னை,

ம.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை டேனியல் தாமஸ் தெருவில் வசிக்கும் மகாலட்சுமி மற்றும் மகாராஜா ஆகியோரின் மகன் வெற்றி விசுவா என்பவர் சென்னையில் உள்ள சுஜ்னா மரைன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கப்பல் நிறுவனத்தில் டெக் கேடட் ஆக பணிக்கு சேர்ந்து ஆந்திர மாநிலம், கிருஷ்ணபட்டணம் எம்.வி. பென்ன சுரக்ஷா கப்பலில் பணி செய்து வந்துள்ளார்.

கடந்த 8-ந்தேதி வெற்றி விசுவா வேலைக்கு வரவில்லை என்றும், கப்பல் முழுவதும் தேடியும் காணவில்லை என்றும் பெற்றோருக்கு கப்பல் நிறுவன மேலாளர் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். மகன் குறித்து கவலை அடைந்த பெற்றோர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.யிடம் மகனை மீட்டுத்தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

வைகோவும், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டிக்கு மின்னஞ்சல் மூலம் அவசர கடிதம் அனுப்பியுள்ளார். அதில் வெற்றி விசுவாவை கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com