நிலத்தகராறில் அ.தி.மு.க. கூட்டுறவு சங்கத்தலைவர் கைது

நிலத்தகராறில் அ.தி.மு.க. கூட்டுறவு சங்கத்தலைவர் கைது
Published on

பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ராங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 46). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆதனூர் கூட்டுறவு சங்க தலைவராக பதவி வகித்து வரும் அ.தி.மு.க. வை சேர்ந்த தர்மன் (50) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தர்மபுரி கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கிருஷ்ணன் கடந்த 10-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகி உள்ளார். ஆனால் தர்மன் ஆஜராகவில்லை என தெரிகிறது.

பின்னர் கிருஷ்ணன் வீட்டிற்கு வந்தபோது அவரை வழிமறித்த தர்மன் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த கிருஷ்ணன் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து கிருஷ்ணன் பென்னாகரம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் தர்மன் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே தர்மன் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று பென்னாகரம் போலீசார் தர்மனை கைது செய்தனர். அ.தி.மு.க. கூட்டுறவு சங்கத்தலைவர் நிலத்தகராறில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com