தமிழகத்தில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு கேமரா தொழில்நுட்பம் - காஞ்சிபுரத்தில் அறிமுகம்

தமிழகத்திலேயே முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் 110 செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் கொண்ட தொழில்நுட்பம் தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு கேமரா தொழில்நுட்பம் - காஞ்சிபுரத்தில் அறிமுகம்
Published on

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், விபத்துகளின் உண்மை தன்மையை அறியவும் 5 மெகா பிக்சல் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட 110 கேமராக்கள் நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய தொழில்நுட்பத்தை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தொடங்கி வைத்தார். இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலம் வாகனம் ஓட்டிய நபரின் உருவம் மற்றும் வாகனத்தின் நிறம், பெயர், எண் உள்ளிட்டவற்றை துல்லியமாக கண்டறியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com