ஆறுமுகநேரியில் மத்திய அரசின் 9ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்

ஆறுமுகநேரியில் மத்திய அரசின் 9ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
ஆறுமுகநேரியில் மத்திய அரசின் 9ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்
Published on

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி மயின் பஜாரில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆறுமுகநேரி மண்டல் தலைவர் முருகேச பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் ஆர். சிவமுருக ஆதித்தன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்தனகுமார், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட பொதுச் செயலாளர் தங்க பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேந்திரன், மண்டல் பொதுச் செயலாளர் ஹரிஷ் குருசாம்ராட், கிளைத் தலைவர் ராஜ் சந்திரகுரு, மாவட்ட மண்டல் நிர்வாகிகள் முருகானந்தம், சண்முகம், சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். மண்டல் பொதுச்செயலாளர் தங்கக் கண்ணன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com