முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் கைது வீட்டுகாவலில் வைப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் போலீசாரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் கைது வீட்டுகாவலில் வைப்பு
Published on

சிவகங்கை

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய கருணாஸ், கடந்த 10 ஆம் தேதி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தா. ஆனால், கருணாசுடன் திமுக பேச்சுவாத்தை நடத்துவதற்கோ, தொகுதிகள் ஒதுக்குவதற்கோ முன்வரவில்லை. அதைத் தொடாந்து திமுகவுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக மறுநாள் அறிவித்தா.

மேலும் சட்டபைதேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை போட்டியிடவில்லை என்றும் அதன்பின்னர் அறிவித்தார்.இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் முதல்-அமைச்சருக்கு கறுப்புக்கொடி காட்ட திட்டமிட்டிருந்ததாகக் கூறி தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீசார் அவரை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com