
தமிழக சட்டமன்றத்திற்கு ஒரேகட்டமாக இன்று (23.04.2026) தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும்நிலையில், காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. அப்போது வாக்குச்சாவடி தலைமை அலுவலர், மற்ற 3 அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் இருந்தனர்.
குறிப்பிட்ட சின்னத்தின் எதிரே உள்ள பட்டனை அழுத்தினால் அதே சின்னத்திற்குதான் ஓட்டு விழுகிறதா? என்பதையும், அந்த சின்னம்தான் விவி பாட் எந்திரத்தில் தெரிகிறதா? என்பதையும் உறுதி செய்து வருகின்றனர். இப்படி 50 ஓட்டுகள் வெவ்வேறு சின்னத்தில் போட்டு சோதனை செய்யப்படுகிறது.
பின்னர் அவை எண்ணி பார்க்கப்படும். பதிவான வாக்குகளும், எண்ணப்படும் வாக்குகளும் சரியான கணக்கில் இருக்கும்பட்சத்தில் மாதிரி வாக்குப்பதிவு நிறைவு பெறும்.