

தமிழக சட்டசபையில் நீதி நிர்வாகம் மற்றும் சிறைத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக்கோரிக்கை நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வு புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, சாமிநாதன் பேசிய காட்சிகள் ஒளிபரப்பாகின. இதனை பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்து பயனடைந்தனர்.