கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி, தோட்டாக்களுடன் பிடிபட்ட காங்கிரஸ் பிரமுகர்

துப்பாக்கி, தோட்டாக்களுடன் கேரளா காங்கிரஸ் பிரமுகர் கோவை விமான நிலையத்தில் பிடிபட்டார்.
கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி, தோட்டாக்களுடன் பிடிபட்ட காங்கிரஸ் பிரமுகர்
Published on

கோவை

கேரளாவை சேர்ந்தவர் கே.எஸ்.பி. தங்கல், காங்கிரஸ் பிரமுகர் . பட்டாம்பு நகராட்சி முன்னாள் தலைவரான இவர் பட்டாம்பியில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார்.

கோவையில் இருந்து பெங்களூரு விமானத்தில் செல்லும்போது அவர் 22 ரக கைத்துப்பாக்கி, 7 புல்லட்டுகளுடன் பிடிபட்டார். துப்பாக்கி வைத்திருக்க இவர் உரிமம் வைத்திருக்க வில்லை. இதை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com