மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சி: காப்பாற்ற முயன்றவரும் கொலை செய்ய வந்த வரும் பலி

கலசபாக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர் மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றதில் காப்பாற்ற முயன்றவர் உட்பட 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சி: காப்பாற்ற முயன்றவரும் கொலை செய்ய வந்த வரும் பலி
Published on

கலசப்பாக்கம்,

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள சொரகொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரன்ராஜ் (வயது 26). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகையில் கட்டிலில் படுத்து தூங்கி உள்ளார்

அப்போது அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை (45) என்பர் தூங்கிக் கொண்டிருந்த சரன்ராஜ் மீது மின்சாரம் பாச்சி கொலை செய்ய முயன்று உள்ளார்.

மின் கம்பி சரன்ராஜ் மீது பட்டதும் அலறி அடித்து கொண்டு சரன்ராஜ் எழுந்து உள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர் ரேனுகோபால் (33) தப்பியோட முயற்ற ஏழுமலையை பிடிக்க முயன்றார்.

அப்போது அவர் மீது மின்சாரம் பாயந்ததில் ஏழுமலையும் ரேனுகோபாலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சரன்ராஜ் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுபற்றி தகவல் அறிந்த கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com