மனைவி இறந்த துக்கம் தாளாமல் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பத்தூரில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி இறந்த துக்கம் தாளாமல் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திருப்பத்தூர் டவுன் புதுப்பேட்டை ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 45), ஆட்டோ டிரைவர். அவரது மனைவி மலர்விழி (32), சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மலர்விழி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ராஜா மனைவி இறந்த துக்கம் தாளாமல் மனவேதனையுடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று ராஜா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் டவுன் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com