கடலூர் அருகே டிப்பர் லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலி - மகன் உட்பட 2 பேர் படுகாயம்

கடலூர் அருகே ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதியதில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். மகன் உட்பட இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
கடலூர் அருகே டிப்பர் லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலி - மகன் உட்பட 2 பேர் படுகாயம்
Published on

கடலூர்,

கடலூர் முதுநகர் அடுத்த சோழங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் வயது 40 ஆட்டோ டிரைவர். இவருக்கு 3 பெண் பிள்ளைகள் ஒரு மகன் உள்ளனர். இவர் கடலூரில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 36) அவரது மகன் அரட்பீஸ் (வயது 8) ஆகியோர் கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்த உறவினரை அழைத்துச் கொண்டு கிருமாம்பாக்கம் நோக்கி வந்துகொண்டிருந்தார்.

காட்டுக்குப்பம், கடலூர்-பாண்டி மெயின் ரோட்டில் வந்த போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோதி ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ டிரைவர் பன்னீர்செல்வம் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். ஆட்டோவில் பயணம் செய்த செல்வகுமார் அவரது மகன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

பின்னர் அங்கு வந்த கிருமாம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது சம்பந்தமாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com