வேப்பூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

வேப்பூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உயிழந்தா.
வேப்பூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
Published on

ராமநத்தம், 

விருத்தாசலம் அண்ணா நகரை சேர்ந்தவர் காசிம் பாஷா மகன் முகமது பாஷா (வயது 24). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று தனது ஆட்டோவில் பிரவீன்குமார் என்பவரை ஏற்றிக்கொண்டு விருத்தாசலத்தில் இருந்து கண்டபங்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தார். வேப்பூர் அடுத்த சித்தூர் துணை மின்நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென முகமது பாஷாவின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடி, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த முகமது பாஷாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முகமது பாஷா இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரவீன்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com