குடியரசு தினத்தில் வழங்கப்படும்: வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்

குடியரசு தினத்தில் வழங்கப்படும்: வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் -தமிழக அரசு அறிவிப்பு.
குடியரசு தினத்தில் வழங்கப்படும்: வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வீர, தீரச் செயல்களுக்கான "அண்ணா பதக்கம்" ஒவ்வொரு ஆண்டும் முதல்-அமைச்சரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சம் காசோலை, ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.

2023-ம் ஆண்டு வழங்கப்படவுள்ள வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் வீர, தீரச் செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/என்ற இணைய தளம் மூலமாகவோ டிசம்பர் 15-ந்தேதிக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com