இலங்கையில் இருந்து சபரிமலைக்கு செல்ல விமானத்தில் வந்த அய்யப்ப பக்தர் மரணம்

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் வந்தது.
இலங்கையில் இருந்து சபரிமலைக்கு செல்ல விமானத்தில் வந்த அய்யப்ப பக்தர் மரணம்
Published on

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் வந்தது. யாழ்பாணம் தேல்லிபாலையை சேர்ந்த அய்யப்ப பக்தரான மோகனதாஸ் (வயது 49) என்பவர் தனது அய்யப்ப பக்த நண்பர்களுடன் சபரிமலைக்கு செல்ல விமானத்தில் வந்தார்.

விமானம் நடுவானில் பறந்து வந்தபோது மோகனதாசுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. விமானத்தில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரது உடல்நிலை மோசமானதால் இதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அவசர கால மருத்துவ உதவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் விமானம் தரையிறங்கியதும் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் விமானத்தில் ஏறி அய்யப்ப பக்தரை பரிசோதனை செய்தனர். அதில் மோகனதாஸ் விமான இருக்கையிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த விமான நிலைய போலீசார் மோகனதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.நண்பர்களுடன் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்ல வந்த மோகனதாஸ் இறந்ததால் அவரது உடலை மீண்டும் இலங்கைக்கு கொண்டு செல்ல இலங்கை தூதரக அதிகாரிகள் மூலம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com