மோசமான வானிலை... அமைச்சர் வன்னி அரசு பயணித்த விமானம் மதுரையில் தரையிறக்கம்

மேலூர் அருகே 2 முறைக்கு மேலும் வட்டமடித்து கொண்டிருக்கிறது.
மோசமான வானிலை... அமைச்சர் வன்னி அரசு பயணித்த விமானம் மதுரையில் தரையிறக்கம்
Published on

மதுரை,

கோவையில் மோசமான வானிலை காரணமாக வானில் வட்டமடித்த விமானம் மதுரையில் தரையிறக்கப்பட்டது.

அமைச்சர் வன்னிஅரசு உட்பட 165 பயணிகளுடன் பயணித்த சென்னை - கோவை இண்டிகோ விமானம் மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வந்தது. அதன்பின்பு கோவையில் தரையிறங்குவதற்கு சாதகமான சூழல் இல்லாததால் மதுரைக்கு திருப்பி விடப்பட்டு அங்கு தரையிறங்கியது.

45 நிமிடங்களுக்கும் மேலாக...

இதேபோல மும்பையில் இருந்து மதுரை வந்த மற்றொரு இண்டிகோ விமானம் 45 நிமிடங்களுக்கும் மேலாக வானில் வட்டமடித்து வருகிறது. அந்த வகையில் மானாமதுரை அருகே 3 முறைக்கு மேலும், தற்போது மேலூர் அருகே 2 முறைக்கு மேலும் வட்டமடித்து கொண்டிருக்கிறது. அதில் 125 பயணிகள் பயணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com