தாமிரபரணி ஆற்றில் துணி, சடங்கு பொருட்கள் வீச தடை: மதுரை ஐகோர்ட்டு

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தாமிரபரணி
Published on

மதுரை,

தாமிரபரணி நதியைத் தூய்மையாகப் பராமரிப்பது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மிக முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ஆற்றங்கரையோரங்களில் உயிரிழந்தவர்களுக்கான இறுதி சடங்குகளை செய்யும்போது, அவர்கள் பயன்படுத்திய துணிமணிகள், பொருட்கள் மற்றும் சடங்குப் பாத்திரங்களை நீரில் தூக்கி எறிவதால் நதியின் தூய்மை பெருமளவில் பாதிக்கப்படுவதாக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளனர்.

தாமிரபரணி

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள ஆனந்த விலாஸ் மண்டபம் தொடர்பான ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை எதிர்த்து சிவனுபாண்டியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணையின்போது, தாமிரபரணி ஆற்றில் ஈமச்சடங்குகளின் பெயரில் துணி, பானை, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் கொட்டப்பட்டு ஆறு மாசுபடுவது குறித்து நீதிமன்றம் தானாகவே கவனம் செலுத்தியது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் விரிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

தடை

தாமிரபரணி நதியின் தூய்மையைப் பாதுகாக்கும் வகையில், ஈமச்சடங்குகள் என்ற பெயரில் ஆற்றில் துணிமணிகள் மற்றும் கழிவுப் பொருட்களை வீசுவதற்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்துள்ளது.

அஸ்தியைத் தவிர்த்துப் பிற பொருட்களை வீசுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com