வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் பணியாற்றும் வங்கி ஊழியர் அதிகாரிகள் கூட்டமைப்பினர் நெல்லையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். எட்வின் தலைமை தாங்கினார். சண்முகசுந்தரம், செந்தில் ஆறுமுகம், அஜித்குமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள். பழைய ஓய்வூதிய திட்டம், 5 நாள் வேலை திட்டம், பென்சன் திட்டத்தில் முன்னேற்றம் போன்றவற்றை அமல்படுத்த கோரியும், இருதரப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்தாத வங்கிகளில் உடனடியாக அமல்படுத்தகோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com