தரிசு நிலங்களை மேம்படுத்தி சாகுபடி செய்து பயன்பெறலாம் - வேளாண் இணை இயக்குனர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தரிசு நிலங்களை மேம்படுத்தி சாகுபடி செய்து பயன்பெறலாம் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தரிசு நிலங்களை மேம்படுத்தி சாகுபடி செய்து பயன்பெறலாம் - வேளாண் இணை இயக்குனர் தகவல்
Published on

செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிப்பதாவது:-

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கடந்த மே மாதம் 23-ந் தேதி தொடக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் செங்கல்பட்டு மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இத்திட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 89 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாக, தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக ஒன்று சேர்ந்து 15 ஏக்கர் தரிசு நிலத்தை மேம்படுத்தி சாகுபடி செய்து பயன்பெறலாம். இதற்கு வசதியாக கைபேசியில் உழவன் செயலியில் தாங்களாகவே பதிவு செய்திட வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com