கம்பம்-குமுளி இடையே இரவு நேர பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் தவிப்பு

கம்பம்- குமுளி இடையே இரவு பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
கம்பம்-குமுளி இடையே இரவு நேர பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் தவிப்பு
Published on

தேனி மாவட்டத்தின் எல்லை பகுதியாக கூடலூர் நகரம் அமைந்து உள்ளது. இங்கிருந்து தினசரி ஏராளமான மக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறார்கள். குறிப்பாக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தையல் தொழிலாளர்கள், ஜவுளி மற்றும் வர்த்தக நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் காலையில் சென்றுவிட்டு இரவு ஊருக்கு திரும்பி வருகிறார்கள். இரவு நேரத்தில் தேனியில் இருந்து கம்பம் வரை மட்டுமே அதிகளவு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக கம்பம் நகரில் இருந்து கூடலூர், குமுளிக்கு இரவு 8.30 மணிக்கு மேல் பஸ் வசதி இல்லை. 2 மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் இரவு நேரத்தில் கம்பம் பஸ் நிலையத்தில் காத்திருக்கவேண்டிய அவல நிலை உள்ளது. மேலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் பஸ் ஏறும்போது தள்ளு, முள்ளு ஏற்படுகிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் எனவே கம்பம் நகரில் இருந்து கூடலூர், குமுளி வரை இரவு நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க கம்பம் போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com