பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் 8,500 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
Published on

ஈரோடு,

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6,800 கன அடியாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து 8,519 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து பவானி ஆற்றில் 8,500 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. அதிக அளவில் பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com