மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி

மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி நடைபெற்றது.
மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி
Published on

பனைக்குளம்

ராமநாதபுரம் பட்டணம் காத்தான் ஈ.சி.ஆர். 4 வழிச்சாலையில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மூலம் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் போட்டிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை உதவி கலெக்டர் சிவானந்தம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

போட்டியில் 13 வயதிற்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கு 15 கி.மீ., பெண்களுக்கு 10 கி.மீ., 15 வயதிற்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கு 20 கி.மீ, பெண்களுக்கு 15 கி.மீ, 17 வயதிற்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கு 20 கி.மீ, பெண்களுக்கு 15 கி.மீ. சென்று வரும் வகையில் போட்டிகள் நடைபெற்றது. இதில் முதலிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.5000, 2-ம் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.3000, 3-ம் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.1000, 4 முதல் 10 இடம் வரை பெற்றவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் கலந்து கொண்டவர்களுக்கு கேடயமும், பாராட்டு சான்றும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் பயிற்சியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com