ரத்ததான முகாம்

பழனி நகராட்சி சார்பில் ரத்ததான முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
ரத்ததான முகாம்
Published on

பழனி நகராட்சி மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் சார்பில், மத்திய அரசின் ஆயுஷ்மான்பவ திட்டத்தின் கீழ் ரத்ததான முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு பழனி நகராட்சி ஆணையர் பாலமுருகன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். முன்னதாக அவர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் குறித்து பரிசோதனை செய்யப்பட்டு ரத்ததானம் வழங்க அனுமதிக்கப்பட்டனர். ரத்ததானம் செய்தவர்களுக்கு முட்டை, பழம், சுண்டல் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. முகாமில் நகராட்சி துணைத்தலைவர் கந்தசாமி, நகர்நல அலுவலர் மனோஜ்குமார், பொறியாளர் ராஜவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com