ரத்ததான முகாம்

கெலமங்கலத்தில், பா.ஜனதா சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
ரத்ததான முகாம்
Published on

ராயக்கோட்டை:

கெலமங்கலத்தில் பா.ஜனதா கட்சி சார்பில், அங்குள்ள சமுதாய கூடத்தில் ரத்ததான முகாம் நடந்தது. இதற்கு இளைஞர் அணி தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட தலைவர் நாகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். சுமார் 60-க்கும் மேற்பட்ட இளைஞர் கலந்துக்கொண்டு ரத்ததானம் வழங்கினார்.. இதில் மாவட்ட பொருளாளர் சீனிவாஷ், ஜெக்கேரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ்குமார், ஒன்றிய தலைவர் சந்துரு, செயலாளர் ரூபாஸ்ரீ, நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com