ரத்ததான முகாம்

அம்பை கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
ரத்ததான முகாம்
Published on

அம்பை:

அம்பை கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் பாதுகாப்பு படை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் தங்கபாண்டி, கல்லூரி முதல்வர் சவுந்தரராஜா, கல்லூரி பேராசிரியர்கள், அரசு மருத்துவமனை ரத்தவங்கி மருத்துவர் ராஜேஸ்வரி, என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் சங்கர், ஒய்.ஆர்.சி. திட்ட அலுவலர் செந்தில்ராஜ்குமார், உடற்கல்வி இயக்குனர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வைரவிகுளம் ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் மாரியப்பன் செய்திருந்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com