தேனி அருகே பரபரப்பு:மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டருக்கு தீ வைப்பு:மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தேனி அருகே மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டருக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி அருகே பரபரப்பு:மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டருக்கு தீ வைப்பு:மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Published on

தீ வைப்பு

தேனி அருகே பழனிசெட்டிபட்டி அண்ணா 3-வது தெருவை சேர்ந்தவர் பரமன் (வயது 54). இவர் வாகனங்களுக்கான சீட் கவர் கடை வைத்துள்ளார். இவர் தனது வீட்டின் முன்பு தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதற்கு அருகில் அவருடைய மகள் தேவிபிரியாவின் ஸ்கூட்டரும் நிறுத்தப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் ஆகியவற்றுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால், அவை தீப்பற்றி எரிந்தது. இதை அறிந்த பரமன், தீயை அணைக்க முயன்றார். அதற்குள் அவை எரிந்து நாசமாகின.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து அவர் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று எரிந்த வாகனங்களை பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கோடாங்கிபட்டியில் கடந்த வாரம் இதேபோன்று 2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தில் ஈடுபட்ட யாரும் இதுவரை போலீசாரிடம் சிக்கவில்லை. மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com