சென்னை அண்ணாநகரில் நள்ளிரவில் பயங்கர கார் விபத்து - 6 பேர் படுகாயம்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது.
சென்னை அண்ணாநகரில் நள்ளிரவில் பயங்கர கார் விபத்து - 6 பேர் படுகாயம்
Published on

சென்னை,

சென்னை அண்ணாநகர் 2-வது அவென்யூ பிரதான சாலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில், அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் தூய்மை பணியாளர்கள், சூப்பர் மார்க்கெட் பாதுகாவலர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், விபத்தில் காயமடைந்த 6 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் ஒரு நபரை கைது செய்துள்ளனர். மேலும் விபத்துக்கு காரணமான காரையும் பறிமுதல் செய்துள்ளனர். மதுபோதையில் அதிவேகமாக காரை இயக்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com