ஆட்களை ஏற்றி வந்த சரக்கு வேன் பறிமுதல்

ஆட்களை ஏற்றி வந்த சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆட்களை ஏற்றி வந்த சரக்கு வேன் பறிமுதல்
Published on

கே.வி.குப்பத்தை அடுத்த பில்லாந்திப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன் வாகன சோதனை செய்தார். அப்போது குடியாத்தத்தில் இருந்து செதுவாலை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தார். அதில் 15 பேர் ஆபத்தான முறையில் பயணம் செய்தது தெரியவந்தது. மேலும், வேன் டிரைவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதைத் தொடர்ந்து மினி வேனை பறிமுதல் செய்து கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com