வாலிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்குபதிவு

வாலிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது
வாலிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்குபதிவு
Published on

காரைக்குடி

காரைக்குடி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 33) இவரும் அண்ணா நகரை சேர்ந்த வசந்தகுமார் (35) என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் வசந்தகுமார் கோபிநாத்திடம் ஆன்லைன் பரிவர்த்தனையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய கோபிநாத் பல்வேறு தவணைகளில் ரூ.12 லட்சத்து 32 ஆயிரத்து 846 -ஐ வசந்தகுமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால் வசந்தகுமார் தான் கூறியபடி லாபம் தரும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதற்கான லாபத்தை கோபிநாத்திற்கு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கோபிநாத் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டபோது வசந்தகுமார் பணத்தை கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வசந்தகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com