அனுமதியின்றி பேனர் வைத்த 2 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் வைத்த 2 பேர் மீது வழக்கு
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி அருகில் சிலர் அனுமதியின்றி பிறந்தநாள் கொண்டாட பேனர்களை கட்டி வைத்திருப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த அப்பு (29), பெத்தனப்பள்ளி முனியப்பன் (வயது 34) உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com