பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு செய்ததாக வழக்கு - லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

முறைகேடு தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு செய்ததாக வழக்கு - லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னையை அடுத்த சோழவரம் பகுதியில் பிரதமர் வீட்டு வசதி திட்ட பயனாளிகளுக்கு மானியத் தொகை வழங்கியதில் 54 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், வீடு கட்டாதவர்களுக்கும், தகுதியில்லாதவர்களுக்கும் பணம் வழங்கப்பட்டதாகவும் சோழவரத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த புகார் மீது 25 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 'புகார் அளித்த பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படுமா?' என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், முறைகேடு தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் 23-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com