

புதுடெல்லி,
2021-22 ஆம் ஆண்டிற்கான புதிய திட்டத்தை சிபிஎஸ்இ இன்று அறிவித்துள்ளது,
இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10 மற்றும் 12-ம் வகுப்பில் பாடத்திட்டத்தை இரண்டாக பிரித்து முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவம் என தேர்வு நடத்தப்படும் என்றும், ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் அகமதிப்பீட்டு தேர்வும் நடத்தப்படும் என்றும் முதல்பருவத் தேர்வு நவம்பர்-டிசம்பர் மாதங்களிலும், இரண்டாம் பருவத்தேர்வு மார்ச்-ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு பருவத்திற்கும் மொத்த பாடத்திட்டத்தில் 50% பாடத்திட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் முதல் பருவத் தேர்வு 90 நிமிடங்கள் நடைபெறும் என்றும், இரண்டாம் பருவத் தேர்வு 2 மணி நேரம் நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.